KARPATHU IAS Academy Official
35.8K subscribers
1.61K photos
30 videos
1.15K files
4.54K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from TNPSC வெற்றி (Kubendran Mohan)
ஆகஸ்ட் இரண்டாம் நாள்

⭕️வகுப்பு 1
நேரம் காலை 9 மணி முதல் 10 வரை
https://unacademy.com/course/goalgate-polity-ippitti-pttingk-pootum-2/X229YFFH

⭕️வகுப்பு 2
நேரம் காலை 11 முதல் 12 வரை
https://unacademy.com/course/goalgate-dos-and-donts-in-tnpsc/RF22ZCZM

⭕️வகுப்பு 3
நேரம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை

https://unacademy.com/course/goalgate-geography-through-maps-3/N3MWVFQX

⭕️வகுப்பு 4
நேரம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை

https://unacademy.com/course/vitai-mcqs-mttttum-pootumaa/AQ1W65PE

⭕️வகுப்பு 5
நேரம் இரவு 9 மணி முதல் 10 மணி வரை

https://unacademy.com/course/goalgate-all-in-one-for-group-1-2/4PQPXTUV
Forwarded from TNPSC வெற்றி (Zero2Hero)
இன்று இலவச வகுப்பு
வாழ்க்கையில் தோல்வி தோல்வி தோல்வி.

வாழவே பிடிக்கவில்லை
பலமானவர்கள் இந்த வார்த்தையை என்னிடம் கூறுகிறீர்கள்.

கொஞ்சம் இதை பத்தி பேசலாம்
இந்த வகுப்பில.
சும்மா வாங்களேன் இன்னிக்கு ராத்திரி 7 மணிக்கு
https://unacademy.com/course/ilkku-teervil-vaalllkkaiyil-unnn-ilkku-ennnnnn/70D5AV92

உங்கள் நண்பர்களுடனும் இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Forwarded from TNPSC வெற்றி (Zero2Hero)
*நம் உடலைப் பற்றி அறிவோம்...*

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.
மரணத்திற்கு பிறகும் கூட மனிதனின் நகத்திற்கு ஒன்றுமே ஆகாது....

*அதிசயங்கள் நிறைந்த மனித உடல்.* ..

மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தப் பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்.

இதற்குக் காரணம் மனிதன் உட்காரும் போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.

*ரத்த நாளங்கள், செல்கள்* :-

1. நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும்.

2. நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும்.

3. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

4. மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

5. மனித உடலின் மிகப் பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும், மிகச் சிறிய செல் ஆணின் விந்தாகும்.

6. நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தைச் சுற்றி வந்து விடலாம்.

*தசை* :-

1. கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.

2. மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.

*கால்கள்* :-

1. காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளைக் கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளைக் கொண்டிருக்கும்.

2. கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும்.

3. மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் இருக்கும்.

*கண்கள்* :-

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளைப் பிரித்தெரியும் சக்தியுண்டு.

*மூளை* :-

1. மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

2. நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்குச் செல்கிறது.

3. நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும்.

*இறப்பு* :-

மனிதன் உயிரிழந்தப் பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள்- 31 நிமிடங்கள்
மூளை- 10 நிமிடங்கள்
கால்கள்- 4 மணிநேரம்
தசைகள்- 5 நாட்கள்
இதயம்- சில நிமிடங்கள்.
சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைத்த மதுரை மாற்றுத்திறனாளி வங்கி ஊழியர்
#KarpathuIAS
குடியுரிமை பணித்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள மதுரையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவிக்கு குவியும் பாராட்டு.... தடைக்கல்லை படிக்கற்கலாக மாற்றி சாதித்த மாணவி.

நாட்டின் உயரிய பணியாகக் கருதப்படும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 829 பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை சிம்மக்கல் மணி நகரம் பகுதியை சேர்ந்த முருகேசன் - ஆவுடைதேவி தம்பதியினரின் மகள் பூரண சுந்தரி. 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை இழந்த பூரண சுந்தரி தன்னம்பிக்கையை சற்றும் இழக்காமல் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவியாக தேர்ச்சி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 10ம் வகுப்பில் 471 மதிப்பெண்ணும் 12ம் வகுப்பில் 1092 மதிப்பெண்ணும் பெற்றும் சாதனை படைத்துள்ள இவர் ஆங்கில இளங்கலை இலக்கியம் பயின்றுள்ளார்.

தந்தை மார்க்கெட்டிங் பணி செய்து பல்வேறு பொருளாதார நெருக்கடியில் தன்னை படிக்க வைத்த வறுமையை எண்ணி தான் நன்றாக படித்து நல்ல அரசு வேலையை பெறவேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த 2016 முதல் குரூப் தேர்வு, வங்கி போட்டி தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20 க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை எழுதியுள்ளார்.

தான் எழுதிய பல தேர்வுகளில் தோல்வியை தழுவினாலும் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாமல் 4வது முறையாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, இன்று வெளிவந்த தேர்வு முடிவில் 296 இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளார்.

முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வங்கி தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது பெற்றுள்ள வெற்றி மாணவி பூர்ண சுந்தரிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது.

தான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியாக இந்த வெற்றி இலக்கை அடைய எண்ணற்ற சவால்களை சந்தித்தாக கூறும் பூர்ண சுந்தரியின் வெற்றிக்குப் பின்னால் தனது பெற்றோர் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் உறுதுனையாக இருந்து ஊக்கமளித்து அவர்கள் சொன்ன விஷங்களை முறையாக ஏற்று படித்ததால் மட்டுமே தன்னால் வெற்றி பெற முடிந்தது என்றார்.

போட்டி தேர்விற்காக தான் தனியாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பயின்ற போது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகமும் சிலர் செய்த பொருளாதார உதவியும் மறக்க முடியாத ஒன்றாக தன்னுள் உள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறும் பூர்ண சுந்தரி சிறு வயது முதல் தனது அம்மா சொல்லி தரும் பாடங்களை கற்று வந்த தமக்கு போட்டி தேர்வுகளிலும் தனது அம்மா கற்றுக் கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் தனது தாய் ஆசிரியராக இருந்து தமக்கு உறுதுணையாக இருந்ததாகவும் கூறுனார்.

குடியுரிமை ஆட்சிப்பணியில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி எத்தனை தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் பாலமாக இருந்து ஏழை எளிய மக்களுக்கு உதவ உள்ளதாக கூறினார். மேலும் தன்னை போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் தாங்கள் எடுக்கும் முயற்சியை எந்த நிலையிலும் கைவிடாமல் விடாமுயற்சியோடு தொடர்ந்தால் நிச்சயம் முயற்சி கை கொடுக்கும் என்ற நம்பிக்கை விதையை விதைக்கிறார்
பூர்ண சுந்தரி.

நன்றி AjiTnpsc.