KARPATHU IAS Academy Official
37.4K subscribers
1.53K photos
26 videos
1.12K files
4.47K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
3👍3👏1
5👍3🙏1
வாழ்க்கையில் மன்னிப்பதும்,
மன்னிப்பு கேட்பதும்..

எந்த வகையிலும் நம்மைச் சிறுமைப்படுத்தப் போவதில்லை.

எஞ்சியிருப்பது இன்னும் எத்தனை வருடங்கள், மாதங்கள், நாட்கள் என்பது நமக்கே தெரியாது!

மன்னிப்புக் கேட்பவன் மனிதன் என்றால்..

மன்னிப்பவன் மாமனிதன்!!

இனிய இரவு வணக்கம்.
🔥11👍87👏1
Map - Major Ports
2
சோதனைகள் மனிதனின் மனவளத்தை அதிகரிக்கும்..
வெற்றிகள் அவனது தலைகனத்தை அதிகரிக்கும்..

தோல்விகள் அவனை அடையாளம் காட்டும்..
சிந்தனைகள் மட்டுமே அவனுக்கு நல்வழி காட்டும்..!

தாயம் விழுந்தால் தான் ஆடவே ஆரம்பிக்க முடியும்..!
காயம் பட்டால் தான் வாழவே ஆரம்பிக்க முடியும்..

கண்ணீர்த் துளி விலை மதிப்பற்றது.. அதைப் பொய்யான உறவுக்காக வீணடிக்காதே..

எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இரு.. ஆனால் மனிதர்களிடம் மட்டும்
விழிப்பாய் இரு....

வாழ்க வளமுடன்.....
🔥109👍1
யுபிஎஸ்சி பற்றி கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்பதில் பெருமைப்படுகிறேன் ஐஏஎஸ் தரத்திலான வகுப்புகளை தமிழிலேயே கொடுக்கும் முக்கியமான சேனலாக நாம் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
👏7👌42🙏2🤔1
A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை முறையே 9 மற்றும் 12 நாட்களில் தனித்தனியாகச் செய்து முடிப்பார்கள். அவர்கள் இருவரும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாறி மாறி வேலை செய்தால், A வேலையைத் தொடங்கினால், அந்த வேலை எப்போது முடிவடையும்?

comment in our group https://t.me/tnpsckias
1
ஒரு சிங்கம் ஒரு எலியைப் பிடிக்க முழு திறன் கொண்டதாக இருந்தாலும், அது ஒருபோதும் எலியைப் பிடிக்காது.

உங்களால் முடியும் என்பதால், நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல.

சிங்கத்திற்கு உணவளிக்க எலிகளுக்கு அதன் சிறிய உடலில் கிட்டத்தட்ட போதுமான புரதம் இல்லை, மேலும் எலியைத் துரத்தினால் வீணாக சிங்கத்தின் சக்தி வீணடிக்கப்படும். சிங்கங்கள் எலிகளை வேட்டையாடினால், அவை பட்டினியால் இறக்க நேரிடும்.

அதனால் தான் சிங்கம் எலிகளுக்குப் பதிலாக வரிக்குதிரைகளை சாப்பிடுகிறது.

சிறிய கனவுகளைத் துரத்தும் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுவது உங்களை சோர்வடையச் செய்யும், மேலும் சோர்ந்து போக வழி வகுக்கும், நீங்கள் விரைவில் தோற்றது போல் உணர்வீர்கள்.

இந்தக் கேள்வியை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்: நான் எலிகளைத் துரத்துவதில் பிஸியாக இருக்கிறேனா.

தங்கள் சரியான இலக்குகளை சீரமைக்க மற்றும் சென்றடைய நான் உதவுகிறேன்.

கட்டுப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை உடைத்து சவால் செய்ய நான் உதவுகிறேன், இது சில தனித்துவமான மாற்றங்களுக்கு வழி வகுத்து வெற்றியை உங்களுக்கு வழங்கும்.
16👍13🔥5
🟡தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், தேசிய மஞ்சள் வாரியத்தின் (NTB) பிராந்திய அலுவலகம் மற்றும் அங்கீகாரம் பெற்ற மஞ்சள் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப் பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

🟡தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் தலைமையகத்தினைக் கொண்டுள்ள NTB மேலும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

🟡இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை (ICAR) ஈரோட்டில் மஞ்சள் பரிசோதனை ஆய்வகத்தை நிறுவ உள்ளது.

🟡அதிக குர்குமின் உள்ளடக்கம் கொண்ட புதிய மஞ்சள் வகைகளை உருவாக்குவதிலும் ICAR செயலாற்றும்

🟡இணைய வழி வணிக தளங்கள் மூலம் மஞ்சள் சந்தைப்படுத்தலை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் சிறப்பான வருமானத்திற்காக மதிப்புக் கூட்டல், சேமிப்பு மற்றும் செயலாக்கத்தை ஆதரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
👍42
HOW TO TRAIN YOUR BRAIN

1.Read everyday
2.Write down ideas
3.Exercise on a weekly basis
4.Get out of the comfort zone
5.Write a to-do list daily
6.Take time to meditate
4
''துவண்டு விடாதீர்கள்...!"
.........................................................

இன்று ஊரெங்கும் மருந்துவமனைகளாக மாறி விட்டக் காலம் இது. உடலிற்கு என்ன ஆனாலும் மருத்துவர் சரி செய்து விடுவார் என்று உறுதியாக இருக்கிறீர்களா.. .?

மருத்துவர்களால் உங்கள் உடற்கூறை முற்றிலும் மாற்றியமைக்க இயலாது. அவர்களால் ஓரளவே உதவ இயலும். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பார்கள். மனக்கவலை பல்வேறு உடல்நலக் கேடுகளுக்கு காரணமாகிறது...

'அவருக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு... ஆனாலும்!, மன உறுதி அதிகம் அதனால். மீண்டு வந்திட்டாரு' என்று கூறக் கேட்கிறோமல்லவா...!

'உள்ளம் உறுதியாக இருந்தால் நோயிலிருந்து மீள்வது எளிது' என்று மருத்துவர்களும் கூறுகிறார்கள்...

அன்றாட நடவடிக்கைகளுக்கும் உடல் நலத்திற்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கிறது.

உடல்நலத்தைக் காத்துக் கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்...?

🔹கொஞ்சமா கவலைப்படுங்க...!
.............................................

அனைவருக்கும் ஏதோவொரு சிக்கல் இருக்கத் தான் செய்யும். அவரவர் நிலைக்கேற்ப அறைகூவல் இருக்கும். கவலையே இல்லாதவர் என்று எவருமே கிடையாது...

'கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக் கூடாது' என்பார்கள். எவ்வளவு பெரிய இழப்பென்றாலும் மனமுடைந்துப் போகக் கூடாது என்பதே அதன் பொருள்...

சிக்கல் எழுந்தால் மனமுடைந்துப் போகாதீர்கள். உறுதியாக எதிர்கொள்ளுங்கள்; துணிந்து போராடுங்கள்; குறைவாகக் கவலைப்படுபவர்கள் நீண்ட காலம் வாழ்வார்களாம்...

🔹மன்னிச்சிருங்க; மனசு லேசாயிரும்...!
........................................

'எனக்கு இப்படிப் பண்ணிட்டாரே. இருக்கட்டும்!, எனக்கும் காலம் வரும். அப்போ பார்த்துக்கறேன். 'இந்த வகை மன உறுதி மனதை பாரமாக்கி விடும்...
பயனுள்ள வகையில் எதையும் செய்ய இயலாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருப்போம்.. ஆகவே!, துரோகங்கள், கிடைத்த தருணம் அத்தனையையும் புறந்தள்ளி விட்டு முன்னேறுங்கள்...

உணர்வுபூர்வமான சுமைகள் முன்னேற்றப் பயணத்தில் பாரமாக இருக்கும். மனதை வருத்தக் கூடிய நம்பிக்கை துரோக செயல்களை மன்னித்து விடுங்கள்...

மனம் இளகும். உடலும் நோயற்ற நிலையிலும் இருக்கும்...

🔹சாதகமற்ற சூழலில் தைரியமாயிருங்க...!
......................................

சூழ்நிலை எதிராக இருந்தால் மனமுடைந்து போகாதீர்கள். குறை முயற்சியில் சோர்ந்து போனால் உழைப்பு வீணாகி விடும்...

சிரமப்பட்டு கூட்டைக் கிழித்து வெளியே வரும் வண்ணத்துப்பூச்சியே வானை அலங்கரிக்கிறது...

ஆகவே!, தடைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். கவலைப்பட்டு கலங்கினால் முயற்சி மட்டுமல்ல; உடல் நலமும் பாதிப்புக்குள்ளாகும்...

🔹விருப்பமானதைச் செய்யுங்க...!
......................................

அச்சம், சினம், வெறுப்பு, குற்றவுணர்வு இவை அனைத்துமே செயல் வேகத்தை முடக்குபவை. இந்த உணர்வு தளைகளைக் கடந்து சாதனை உச்சத்தை தொடுவதற்கு உங்களுக்கு விருப்பமான பொழுது போக்குகளில் ஈடுபடுங்கள்...

அவை மனதை முடக்கும் உணர்வுகளை கடக்க உங்களுக்கு உதவும். மனம் மட்டுமல்ல, உடலும் வளமாக விளங்கும்...

🔹"முடியாது'ன்னு மட்டும் சொல்லாதீங்க...!"
......................................

உங்கள் குறிக்கோள் காண்பதற்குப் பெரிதாகத் தெரியலாம். ஆனால்!, சரியான திட்டமிடல் இருந்தால் அதை அடைந்திட இயலும்...

'இதையா, நானா?' என்று மலைத்துப் போய் மனம் தளர்ந்து விடாதீர்கள். பதற்றமடையாதீர்கள். நிதானத்துடன் விவேகமாக முடிவெடுங்கள்...

ஆம் நண்பர்களே...!

🟡 நம்மைத் தொல்லைகள், துன்பங்கள், தடைகள் குறுக்கிடும் போது துவண்டு விடாதீர்கள்...!

🔴 அதுதான் வாழ்க்கை என்று உங்கள் திறமைகளுக்கு நீங்களே முற்றுப்புள்ளி வைக்காதீர்கள்...!!

⚫️ அதையும் மீறி நம்மால் முடியும்,, எதிர்கொள்ள முடியும் என்ற மனவுறுதியுடன் சிகரத்தினை நோக்கி சலிப்பின்றிப் பயணம் செய்யுங்கள்...!!!

-உடுமலை சு. தண்டபாணி✒️

🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
20👍8🙏3🎉2👏1